சென்னை: கூடுவாஞ்சேரி - சிங்கப்பெருமாள் கோயில் இடையே நாளை ரயில்கள் சோதனை ஓட்டம் நடைபெறுவதால் தண்டவாளம் அருகே பொதுமக்கள் நடக்கவோ அல்லது பாதையை கடக்கவோ வேண்டாம் சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தாம்பரம் - செங்கல்பட்டு 3வது ரயில் பாதையின் ஒரு பகுதியாக கூடுவாஞ்சேரி - சிங்கப்பெருமாள் கோயில் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள 3வது புதிய ரயில்வே வழித்தட பணிகள் முடிவுற்ற நிலையில் அதற்கான சோதனை ஓட்டம் நாளை நடைபெறவுள்ளது.