போக்சோவில் வாலிபர் கைது

ஆலந்தூர்: ஆலந்தூர் மார்கோ தெருவை சேர்ந்த எழிலரசன் (20), அதே பகுதி ராஜா தெருவை சேர்ந்த 9ம் வகுப்பு பயிலும் 14 வயது சிறுமியை காதலித்து, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில், கர்ப்பமான சிறுமிக்கு சமீபத்தில் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, எழிலரசனை கைது செய்தனர்.

Related Stories: