28ம் தேதி ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆதரவு

சென்னை: நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பங்கேற்கும் என்று பொதுச்செயலாளர் பெ.சண்முகம் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய விவசாயத்தையும், விவசாயிகளையும் கார்ப்பரேட்களிடம் அடகு வைக்கும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி 28ம் தேதி (நாளை) தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் சார்பில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பங்கேற்கிறது. இந்த சட்டங்களை ஆதரித்து மாபெரும் வரலாற்று தவறை அதிமுக செய்திருக்கிறது. தங்களது சுயலாபத்திற்காக விவசாயிகளுக்கு துரோகமிழைத்திருக்கிறது.

Related Stories: