சென்னை: கல்குவாரிகளின் குத்தகை காலம் 5 ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளாக நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கல்குவாரிகளுக்கு கனிம வளத்துறை மூலம் குத்தகை அனுமதி கொடுக்கப்படுகிறது. தற்போது வரை மாநிலம் முழுவதும் 1200 கல்குவாரிகள் உள்ளது. இக்குவாரிகளுக்கு கனிம வளத்துறை மூலம் 5 ஆண்டுக்கு ஒரு முறை குத்தகை விடப்படுகிறது. இந்த குவாரிகளை குத்தகைக்கு எடுக்கும் நிறுவனங்களில், வெட்டி எடுப்பதில் ஏற்படும் காலதாமதம் காரணமாக, அரசு அனுமதித்த அளவு கூட எடுக்க முடியாத நிலை ஏற்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, குவாரிகளை குத்தைக்கு எடுத்த தொகையை கூட அந்த ஒப்பந்த நிறுவனங்களால் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், குத்தகைக்கு எடுத்த நிறுவனம் பெரும் இழப்பை சந்திப்பதாக கூறப்படுகிறது.