சென்னை: பொதுப்பணித்துறையில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு டெண்டர் தருவதற்காக இணையதளத்தில் டெண்டர் படிவத்தை வெளியிடாமல் அடாவடி செய்திருப்பதாக கான்ட்ராக்டர்கள், அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தி உள்ளனர்.
தமிழக பொதுப்பணித்துறையில் அவசர கால பணிகளை தவிர்த்து, அதாவது, ₹5 லட்சத்துக்குள் உள்ள பணிகளை தவிர மற்ற பணிகளுக்கு டெண்டர் விட்டால் பத்திரிகைகளில் விளம்பரம் தர வேண்டும். அதே போன்று, பத்திரிகைகளில் டெண்டர் அறிவிப்பு வெளியான ஓரிரு நாட்களில் அந்த டெண்டர் குறித்த விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும். ஆனால், பொதுப்பணித்துறையில் டெண்டர் அறிவிப்பு வெளியிட்ட உடனே இணையதளத்தில் படிவத்தை அப்லோட் செய்வதில்லை. மாறாக, டெண்டர் திறக்கும் தேதி நெருக்கத்தில் தான் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதனால், ஒரு சிலர் மட்டுமே டெண்டரில் கலந்து கொள்ள முடிகிறது. பலருக்கு டெண்டர் குறித்த தகவல் இல்லாததால் அவர்களால் கலந்து கொள்ள முடிவதில்லை. சில நேரங்களில் டெண்டர் படிவம் இணையதளத்தில் வெளியிடப்படுவதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.