எஸ்.பி.பி.க்கு அரசு மரியாதை: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:தமிழர்களின் நெஞ்சில் மட்டுமின்றி இந்திய மொழிகள் பலவற்றிலும் பாடிப் புகழ் பெற்று விளங்கி, மத்திய அரசின் பத்மஸ்ரீ-பத்மபூஷண் விருதுகள்  பெற்ற மாபெரும் இசைக் கலைஞர் எஸ்.பி.பால சுப்ரமணியத்தின் இறுதிப்பயணம் முழு அரசு மரியாதையுடன் நடைபெறத் தமிழக அரசு ஆவன செய்ய  வேண்டும்!எல்லைகள் கடந்து ரசிகர்களுக்கு இன்னிசை தந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் மத்திய-மாநில அரசுகளாலும், புகழ் பெற்ற அமைப்புகளாலும் பல்வேறு  விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டவர்.

உலகெங்கும் வாழும் அவரது ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு அரசு மரியாதை செலுத்த  வேண்டும் என்று தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் முதல்வர் பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: