சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இரவு முழுவதும் அஞ்சலிக்காக உடலை வைத்திருக்க மாநகராட்சி அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது. எஸ்.பி.பி.யின் உடல் இன்று இரவே தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. உடல் எடுத்துச் செல்லப்பட உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை கூடுதல் ஆணையர் தினகரன் கவனிக்கிறார்.