சென்னை, விசாரணைக்கு அழைத்து சென்று சித்ரவதை செய்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேருக்கு ரூ.1.75 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கே.கே.நகரை சேர்ந்த அபுல்ஹசன் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2013ம் ஆண்டு குடும்ப பிரச்னை காரணமாக எனக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை அசோக்நகர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி, ஏட்டு மீராபாய் மற்றும் வரலட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தினர். அதன்பிறகு எதிர்தரப்பிடம் இருந்து ரூ.1 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு என் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விசாரணை என்ற பெயரில் 8 நாட்கள் என்னை காவல்நிலையத்தில் அடைத்து வைத்து துன்புறுத்தி சித்ரவதை செய்தனர். எனவே இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.