எல்லா மக்களும் பிரார்த்தனை செய்ததால் எழுந்து வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அது பலனளிக்கவில்லை : பாரதிராஜா கண்ணீர்!!

சென்னை : துக்கத்தில் இருக்கும் போது வார்த்தைகள் வராது என இயக்குநர் பாரதிராஜா கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.கொரோனாவால் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் பாரதிராஜா, “சில சூழ்நிலைகளில் வார்த்தைகள் வராது. உணர்ச்சிவசப்படும் போது வார்த்தைகள் சிக்காது. எஸ்பிபி மிகப்பெரிய பாடகன், உலக மகா கலைஞன் என்பதை விட அவன் என் 50 ஆண்டு கால நண்பன். உலகில் உள்ள எல்லா மக்களும் பிரார்த்தனை செய்ததால் எழுந்து வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அது பலனளிக்கவில்லை. மனிதன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவனுக்கு மேலே ஒரு சக்தி உள்ளது. அதன் முடிவுதான் இது.ஆனாலும் எனக்கு இன்னும் ஒரு சின்ன நம்பிக்கை உள்ளது. அவனை மாதிரி ஒரு கலைஞனை இதுவரை பார்த்ததில்லை” என்று கண்ணீர் மல்க கூறினார்.

Related Stories: