அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட் வரும் 28-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், இன்று காலை சிஎம்டிஏ செயலர் கார்த்திக்கேயன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் அங்கு சென்று ஆய்வு செய்தனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட் கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா நோய்ப்பரவல் அதிகரிப்பால் மூடப்பட்டது. தற்போது பூந்தமல்லி அருகே திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கோயம்பேடு மார்க்கெட்டில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே கடந்த மாதம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.