மயிலாடுதுறை, :வேளாண் சட்ட திருத்த மசோதாவால் விவசாயிகளுக்கு நஷ்டம் இல்லை என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.மயிலாடுதுறையில் அவர் அளித்த பேட்டி: வேளாண் சட்ட திருத்த மசோதாவை எதிர்ப்பவர்கள், எங்கே விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள், எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள், எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்க வேண்டும். நான் ஒரு விவசாயி என்பதால் இந்த மசோதாவை வரவேற்கிறேன். அரசின் குறைந்தபட்ச ஆதாரவிலை எப்போதும் கிடைக்கும்.