தூத்துக்குடி: சமூக வலைதளங்கள் மூலம் சுபாஷ் பண்ணையார் கொலை மிரட்டல் விடுத்துள்ளதால், உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பாதுகாப்பு கேட்டும் திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி எஸ்பியிடம் புகார் மனு அளித்துள்ளார். எஸ்பி ஜெயக்குமாரிடம் அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2001 முதல் இருந்து வருகிறேன். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறேன். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில் உள்ள சொக்கன்குடியிருப்பை சேர்ந்த செல்வன் என்பவர் படுகொலை தொடர்பாக எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட செல்வன் குடும்பத்தாருக்கு நியாயமும், நிவாரணமும் கிடைக்க எனது தலைமையிலும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பிலும் கடந்த 20ம் ேததி இரவு 10 மணியில் இருந்து போராட்டம் நடந்தது.