திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா

சென்னை: திமுக அமைப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான  ஆர்.எஸ்.பாரதி. இவர், நங்கநல்லூர் தில்லைகங்கா நகரில் வசித்து வருகிறார். மாநிலங்களவை கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்த அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என அறியப்பட்டது. இதையடுத்து டெல்லியில் கூட்டத் தொடரில் கலந்துக் கொண்டு சென்னை திரும்பினார். ஆர். எஸ். பாரதிக்கு தொண்டையில் கரகரப்பு காரணமாக கொரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஆர்.எஸ். பாரதி ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அன்பழகன் மரணமடைந்தார். இதேபோல் தமிழகத்தில் பல எம்பிக்கள், எம் எல் ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடப்படது.

Related Stories: