நாங்குநேரி அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா

நெல்லை: நாங்குநேரி தொகுதி அதிமுக எம்எல்ஏ நாராயணன். இவர், நாங்குநேரி தொகுதியில் கடந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த வாரம் தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்றார். இந்நிலையில் சென்னையில் இருந்து திரும்பிய நாராயணன் எம்எல்ஏக்கு கடந்த மூன்று நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. நேற்று காலை நெல்லை ரெட்டியார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்பத்துடன் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பின்னர் கன்னியாகுமரி மாவட்டம், சுவாமிதோப்பு நாராயண சுவாமி கோயிலுக்கு சென்றார். பரிசோதனை முடிவில் அவருக்கும், மகன், மகள் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மூவரும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: