குன்றத்தூர்: குன்றத்தூரை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி கவிதா. தனியார் வங்கி ஊழியர். இவர்களது மகன் பிரைட் ஷாம் (14). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்தான். நேற்று முன்தினம் பெற்றோர் வேலைக்கு சென்றனர். பிரைட் சாம், நீண்டநேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, தூக்கிட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சிடைந்தனர். உடனயாக சிறுவனை மீட்டு, பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர்கள் வந்து, மகனை தூக்கிக் கொண்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், பிரைட் ஷாம் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.