திருப்போரூர்: சென்னை மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (57). கேளம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை மருத்துவராக வேலை பார்க்கிறார். திருப்போரூர் ஒன்றிய தலைமை மருத்துவராக உள்ளார். திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய கேளம்பாக்கம், சிறுங்குன்றம், செம்பாக்கம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் இவரது கட்டுப்பாட்டில் உள்ளன. இவரது மனைவி வள்ளியம்மாள், சென்னை மூவரசம்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர். கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சுப்பிரமணியன், கேளம்பாக்கம் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கான பரிசோதனை, கிராம மக்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டார்.