திருவள்ளூர்: குழந்தைகள் பயன்படுத்தும் செல்போனை அடிக்கடி சோதனை செய்ய வேண்டும் என பெற்றோர்களுக்கு டிஐஜி சமுண்டீஸ்வரி அறிவுறுத்தினார். திருவள்ளூர் அருகே தனியார் கல்லூரியில் மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஏஎஸ்பி மீனாட்சி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமூண்டீஸ்வரி கலந்து கொண்டு பேசியதாவது.
இன்றைய காலகட்டத்தில் பெண்களும், குழந்தைகளும் விழிப்புணர்வுடன் இருந்தால் குற்றங்கள் வெகுவாக குறைக்கப்படும். பாலியல் தொல்லை தரும் குற்றவாளிகளிடம் இருந்து குழந்தைகளை நாம்தான் பாதுகாக்க வேண்டும். பாதுகாப்பற்ற தொடுதல் குறித்தும் புரிய வைக்க வேண்டும்.