ஆவடி: குழந்தை இல்லாத விரக்தியில், நர்ஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவடி அடுத்த அரிக்கம்பேடு, பள்ளத் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் (32). கூலித்தொழிலாளி. இவரது மனைவி விமலா (28). கொள்ளுமேடு கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் தம்பதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதற்கிடையில், சந்தோஷ் குடி பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் அவர், வீட்டுக்கு வரும்போது மது அருந்திவிட்டு செல்வார். இதையொட்டி கணவன், மனைவி இடையே அடிக்க தகராறு ஏற்படுவது வழக்கம்.இந்நிலையில் நேற்று முன்தினம் சந்தோஷ், மதுகுடித்து விட்டு வீட்டுக்கு சென்றார். இதனால் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.