சென்னை: நீலாங்கரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உள்பட 8 போலீசாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், மாநகர காவல் துறையில் நேற்று நீலாங்கரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் என 8 போலீசாருக்கு தொற்று உறுதியானது. அதை தொடர்ந்து 8 போலீசாரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை முகாமில் அனுமதித்துள்ளனர்.