திருப்புவனம்: மத்திய பல்கலை கழகத்தைச் சேர்ந்த புவியியல் பிரிவு வல்லுனர் குழுவினர் நேற்று அகரத்தில் ஆய்வுக்காக மண் மாதிரிகளை சேகரித்தனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதேபோல் கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய இடங்களிலும் அகழாய்வு தொடங்கி நடந்து வருகிறது. கீழடியில் பிப்ரவரியில் தொடங்கிய அகழாய்வு பணிகள் செப்டம்பருடன் முடிவடைய உள்ளன. இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக நிலவியல் துறை பேராசிரியர் ஜெயம்கொண்ட பெருமாள் தலைமையிலான குழு, கீழடி, அகரம் ஆகிய பகுதிகளில் மண்ணின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதில் அகரம் ஆழமான பகுதியாக இருப்பதால் இங்கு கூடுதலாக புவியியல் பிரிவு வல்லுனர்கள் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.