தனியார் கிளப்பில் ஆபாச நடனமாடிய 12 பெண்கள் மீட்பு

பெரம்பூர்:   கொளத்தூர் திருவள்ளுவர் நகரில் உள்ள ஒரு தனியார் கிளப்பில் பெண்களை வைத்து  ஆபாச நடனம் ஆடுவதாக அண்ணாநகர் துணை கமிஷனருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்  நேற்று முன்தினம் இரவு போலீசார் அந்த கிளப்பில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 12 பெண்கள் ஆபாச நடனம்  ஆடிக்கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.  விசாரணையில், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், மற்ற பெண்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அவர்களை மீட்டு பெரவள்ளூர் பகுதியில்  உள்ள  பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்த அகமது பைசல் (33) என்பவரை கைது செய்தனர்.

Related Stories: