புழல்: செங்குன்றம் அருகே உள்ள அலமாதி, எடப்பாளையம் மற்றும் சோழவரம் ஏரி பின்புறம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசுக்கு சொந்தமான இடங்களை சமூக விரோதிகள் சிலர் ஆக்கிரமித்து வீட்டுமனைகளாக விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தனர். இதுகுறித்து, பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், பொன்னேரி கோட்டாட்சியர் வித்தியா ஆகியோருக்கு பலமுறை புகார் மனுக்கள் அனுப்பினர். இந்த புகாரின்பேரில், பொன்னேரி தாசில்தார் மணிகண்டன், சோழவரம் வருவாய்துறை ஆய்வாளர் பாரதி, அலமாதி கிராம நிர்வாக அதிகாரி முருகேசன் மற்றும் வருவாய்துறை ஊழியர்கள் சோழவரம் ஏரி பின்புறமுள்ள எடப்பாளையம் பகுதியில் ஆய்வு செய்தனர்.