மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே சென்னை அணுமின் நிலையம் சார்பில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை சென்னை அணு மின் நிலைய இயக்குனர் திறந்து வைத்தார். மாமல்லபுரம் அடுத்த தேவனேரி மீனவ குப்பத்தில் 200க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கல்பாக்கத்தில் இயங்கி வருகின்ற சென்னை அணுமின் நிலைய நிர்வாகத்துக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.