அணுமின் நிலையம் சார்பில் 12 லட்சத்தில் அங்கன்வாடி மையம் திறப்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே சென்னை அணுமின் நிலையம் சார்பில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை சென்னை அணு மின் நிலைய இயக்குனர் திறந்து வைத்தார். மாமல்லபுரம் அடுத்த தேவனேரி மீனவ குப்பத்தில் 200க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கல்பாக்கத்தில் இயங்கி வருகின்ற சென்னை அணுமின் நிலைய நிர்வாகத்துக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று சென்னை அணுமின் நிலைய நிர்வாகம் ரூ12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, ஒரு அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இந்த அங்கன்வாடி மையத்தை நேற்று சென்னை அணுமின் நிலைய இயக்குனர் சீனிவாஸ்  திறந்து வைத்தார். இதில், சமூக பொறுப்பு குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மனித வள மேலாளர் சீனிவாசன் மற்றும் மீனவ மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: