காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் நகரத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் சார்பில் நடைபெற்று வரும் இலவச மாற்று பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு நுழைவுச் சீட்டு வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் முதன்மை மேலாளர் ப.மோகனவேல் தலைமை தாங்கினார்.