கிசான் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: கிசான் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். மும்மொழியை ஏற்கமாட்டோம் என பேசும் அதிமுக, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றாது என முத்தரசன் குறிப்பிட்டார். நீட் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கண்டித்து இடதுசாரிகள் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார். சென்னை திருவான்மியூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இரா. முத்தரசன் மற்றும் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories: