நெல்லை : மேலப்பாளையம் ஆட்டுச்சந்தையில் இடநெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் பழைய குப்பைத்தொட்டிகள் குவிந்து கிடக்கின்றன. நெல்லை மாவட்டத்தின் முக்கிய கால்நடை சந்தைகளுள் ஒன்று மேலப்பாளையம் வாரச்சந்தை ஆகும். இங்கு திங்கட்கிழமை மாட்டுச்சந்தையும், செவ்வாய் கிழமை ஆடு, கருவாடு, கோழி உள்ளிட்ட சந்தைகளும் கூடுகின்றன. நெல்லை மாநகராட்சியின் முக்கிய வருமானம் ஆட்டுச்சந்தையாகும். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக சந்தைகள் மூடப்பட்டுள்ளதால் மேலப்பாளையம் ஆட்டுச்சந்தையும் மூடப்பட்டுள்ளன. இதனால் இந்த சந்தையை நம்பியுள்ள ஆடு, மாடுகள், கோழிகள் வளர்க்கும் விவசாயிகள், இறைச்சி கடைக்காரர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.