சென்னை: அதிமுக ஒற்றுமையுடன் தான் இருக்கிறது என்று ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை திருவெற்றியூரில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். இளைஞர்கள் தாமாக முன்வந்து அதிமுகவில் இணைகின்றனர். முதல்வர் யார் என்பது பற்றி பேசக்கூடாது என்று 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.