புழல்: சோழவரம் அருகே அத்திப்பேடு, அண்ணா தெருவை சேர்ந்தவர்கள் விக்னேஷ் (18), கவுதம் (18), நெல்சன் (17). இவர்கள் 3 பேரும் நண்பர்கள். இவர்கள் நேற்று முன் தினம் மாலை ஒரே பைக்கில் காரனோடை அருகே ஜனப்பசத்திரம் கூட்டு சர்வீஸ் சாலையில் வேகமாக சென்றனர். அப்போது பொன்னேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த ஒரு லாரி, இவர்களின் பைக்மீது எதிர்பாராத விதமாக வேகமாக மோதியது. இதில் விக்னேஷ் சம்பவ இடத்தில் பலியானார். கவுதம், நெல்சன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.