மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு வேள்வி பூஜை நடந்தது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு, நேற்று வேள்வி பூஜை நடந்தது. மகாளய அமாவாசையையொட்டி, மக்களை வாட்டி வரும் கொரோனாவில் இருந்து உலக மக்கள் விடுபட்டு, மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். மக்கள் அமைதி பெற்று நிம்மதியுடன் வாழ வேண்டும். முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும். இயற்கை வளம் பெற வேண்டும் என சங்கல்பம் செய்து சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளார் எண்கோண வடிவத்தில் அமைக்கப்பட்ட பெரிய யாக குண்டத்தில் கற்பூரம் ஏற்றி பூஜையை தொடங்கி வைத்தார்.