சென்னை: சிந்தாதிரிப்பேட்டை எல்ஜி சாலை அருகே நேற்று முன்தினம் மாலை வாலிபர் ஒருவர் திடீரென கூவம் ஆற்றில் குதித்தார். இதை பார்த்த பொதுமக்கள், அந்த வாலிபர் தற்கொலைக்கு முயன்றாரோ என நினைத்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர் கூவம் ஆற்றில் நீச்சல் அடித்து கொண்டிருந்தார். இதை பார்க்க பொதுமக்கள் அதிகளவில் திரண்டதால், சிந்தாதிரிப்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த வாலிபரை மீட்க முயன்றனர். ஆனால் அந்த வாலிபர் போலீசார் வந்ததை பார்த்து, அவர்களிடம் சிக்காமல் இருக்க ஆற்றின் இரு புறங்களிலும் நீந்தி ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்கு காட்டினார்.