சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு சிறப்பு கவன ஈர்ப்பு கொண்டு வந்து பேசியதாவது: மருத்துவ கல்வி உயர் படிப்பில் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு மறுத்து வருகிறது. அநீதி இழைத்து வருகிறது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்க உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் திமுக ஆட்சியில் வழக்கு போடப்பட்டு வெற்றி கிடைத்தது. மத்திய அரசு தற்போது குழு அமைத்துள்ளது. அதில், தமிழக பிரதிநிதியாக துறையின் செயலாளரை அனுப்பாமல் வேறொருவர் அனுப்பப்பட்டுள்ளார். எனவே, துறை செயலாளரை பிரதிநிதியாக அனுப்ப வேண்டும். 50 சதவீதம் இடஒதுக்கீட்டை பெற்றுத்தர வேண்டும்.