மாநகர் போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்படும்: மேலாண் இயக்குநர் தகவல்

சென்னை: மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பிலான குரோம்பேட்டை பயிற்சி மையத்தில் இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மாநகர் போக்குவரத்துக்கழகத்தில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியானது குரோம்பேட்டையில் சிறந்த முறையில் இயங்கி வருகிறது. தற்போது, இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சியும்  அளிக்கப்பட்டு, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வாயிலாக ஓட்டுநர் உரிமமும் பெற்று தரப்படுகிறது. பெண்களுக்கு, பெண் பயிற்சி ஆசிரியர்களாலேயே ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு ஒரு மாத காலம் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு 3 மாத காலம் பயிற்சி காலமாகும். அரசு சார்ந்த இப்போக்குவரத்து பயிற்சி மையத்தில் குறைவான கட்டணத்தில் தரமான பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: