பெங்களூரு: போதைப்பொருள் விநியோகம் தொடர்பாக கன்னட நட்சத்திர ஜோடிகளான திகந்த், அன்ட்ரிடா ராய் ஆகியோரிடம் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னட திரையுலகில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகம் உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முன்னணி நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான நடிகைகள் ராகினி, சஞ்சனா கல்ராணி மற்றும் தொழிலதிபர் ராகுல் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கன்னட திரையுலகில் பிரபலமான திகந்த், அன்ட்ரிடா ராய் தம்பதிக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.