ஊத்துக்கோட்டை: நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளை முறையாக பதிவு செய்து, வேகமாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் தார்பாய் போட்டு மூடி பாதுகாத்திட வேண்டும். நெல் வியாபாரிகள், இடைதரகர்களை அனுமதிக்க கூடாது. ஒரு நாளைக்கு 800 மூட்டை வாங்குவதற்கு பதிலாக 1,600 மூட்டைகளாக வாங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் விவசாய சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட தலைவர் ஜி.சம்பத் தலைமை வகித்தார்.