புழல்: செங்குன்றம் அடுத்த நல்லூர் ஆட்டந்தாங்கல் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ஹரி (55). இவர் எம்.ஏ.நகர் திருவள்ளூர் கூட்டுச் சாலையில் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு வந்த 2 மர்ம ஆசாமிகள் ₹30 ஆயிரம் மதிப்பிலான துணிகளை வாங்கினர். பின்னர் அதற்கு பணம் கொடுக்காமல் ஊழியர்களிடம், “கடை உரிமையாளர் ராஜேஷ்தானே. அவருக்கு போன் போட்டுக்கொடுங்கள்” என கூறினர். உரிமையாளர் பெயரை மாற்றி சொன்னதால் சந்தேகமடைந்த ஊழியர்கள், ஹரிக்கு போனில் தகவல் தெரிவித்தனர்.