உரிமையியல் நீதிபதி பதவி முதன்மை தேர்வு தேதி வெளியீடு

சென்னை: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவியில் 176 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான முதனிலை எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் 24ம் தேதி நடந்தது. தொடர்ந்து, கடந்த மார்ச் 28ம், 29ம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த முதன்மை எழுத்து தேர்வு கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், அதனை தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட முதன்மை எழுத்துத் தேர்வு, அடுத்த மாதம் 17ம் தேதி மற்றும் 18ம் தேதி ஆகிய நாட்களில் சென்னை மையத்தில் மட்டும் நடைபெறும். இதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு தேர்வாணைய இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும்.

Related Stories: