சென்னை: மத்திய அரசு காசநோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வது தொடர்பான வழிமுறைகளை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. நோய் அறிகுறி உள்ள காசநோயாளிகள், சிகிச்சையில் உள்ள காசநோயாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். குறிப்பாக 2 வாரங்களுக்கு மேல் இருமல், 2 வாரங்களுக்கு மேல் தொடர்ந்து காய்ச்சல், எடை இழப்பு உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்களுக்கு கட்டாயம் சோதனை செய்ய வேண்டும்.
இதன்பிறகு காசநோய்- கொரோனா ஆகிய இரு நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனியாக கண்டறிந்து கோவிட் தனிமைப்படுத்தும் மையங்களில் காசநோய் சிகிச்சை மற்றும் கொரோனா சிகிச்சைகள் வழங்க வேண்டும். இதன்படி தமிழகத்தில் அறிகுறி உள்ள காசநோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.