கிருஷ்ணராயபுரம் அதிமுக எம்எல்ஏ கீதாவுக்கு கொரோனா

சென்னை:  தமிழகத்தில் மக்கள் பிரதிநிதிகள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. அந்த வரிசையில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம்  தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கீதாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இவர் தனது தொகுதியில் ஊரடங்கால்  பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசின் திட்டங்களை கொண்டு செல்வதற்கான ஆய்வு பணிகளில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், அவரது உதவியாருக்கு  நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று கீதாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில்  அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: