பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 15 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 15 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை அசோக் நகரை சேர்ந்த சீதாராமன் மகன் ஹரிஹரன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார். இவர் உள்பட தமிழகம் முழுவதும் 15 பேர் பல்வேறு துயர சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர், என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். மேற்கண்ட 15 பேரில் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேற்கண்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 15 பேரில்  குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: