சிஆர்பிஎப் காவலர் வீட்டில் கொள்ளை முயற்சி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி முனுசாமி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (56). இவர், ஆவடியில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள டேங்க் பேக்டரி சிஆர்பிஎப் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஆரம்பாக்கம் பகுதியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இருவரும் வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் இருவரும் வீட்டுக்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலின்பேரில் கும்மிடிப்பூண்டி போலீசார் சம்பவ இடம் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அவரது வீட்டின் பீரோவை மர்ம நபர்கள் சிலர் உடைக்க முயன்றனர். ஆனால் கதவு உடைக்க முடியாமல் அவர்கள் திரும்பி சென்றனர்.  இதனால் 20 சவரன் தங்க நகை தப்பியது தெரியவந்தது. புகாரின்பேரில் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: