கோஷ்டி மோதலில் 9 பேர் கைது

சென்னை: பெரும்பாக்கம் எழில்நகர் குடிசை மாற்று வாரிய 8 அடுக்கு மாடி குடியிருப்பில் வல்லரசு மற்றும் சல்மான் ஷேக் கோஷ்டிகளுக்கு இடையே முன்விரோதம் உள்ளது. இருதரப்பினரும் நேற்று தகராறில் ஈடுபட்டு, அங்கிருந்த 4 ஆட்டோக்களை அடித்து நொறுக்கினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து சல்மான் சேக் (25) மற்றும் இவரது கோஷ்டியை சேர்ந்த பீலி (32), விஷ்வா (எ) சரத்குமார் (25),  உட்டான் (எ) உதயகுமார் (24), கோழி வினோத் குமார் (24), குள்ளா (எ) சத்யா (18) மற்றும் வல்லரசு (19), இவரது கோஷ்டியை சேர்ந்த ரூபேஷ் பாபு (23), விக்னேஷ் (21) ஆகியோர் என 9 பேரை கைது செய்தனர்.

Related Stories: