சென்னை: ராயப்பேட்டை பகுதியில் வாட்ஸ்அப் குழு மூலம் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த வாட்ஸ்அப் எண்ணை கண்டறிந்த போலீசார், அதில் வாடிக்கையாளர்கள் சாட்டிங் செய்து, கஞ்சா தேவைப்படுவதாக வியாபாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதற்கு, ராயப்பேட்டை ரோட்டரி நகர் மற்றும் லாயிட்ஸ் சாலை சந்திப்பில் காத்திருக்கும்படி எதிர்முனையில் தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் சாதாரண உடையில் அவர்கள் குறிப்பிட்ட பகுதியில் காத்திருந்தனர். அப்போது, அவர்கள் குறிப்பிட்டபடி ஆட்டோவில் 3 பேர் கஞ்சா கொடுக்க வந்தனர்.