ராணிப்பேட்டை: நீட் தேர்வு அச்சத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி அடங்குவதற்குள், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நீட் தேர்வு எழுதவிருந்த மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பாரதி நகர் பகுதியை சேர்ந்த ரவிசந்திரன் என்பவரின் மகள் சௌமியா. இவரே தற்கொலைக்கு முயன்றவராவார். 12ம் வகுப்பு முடித்துவிட்டு மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு இருந்த இவர் நீட் தேர்விற்காக பயிற்சியை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து கடும் எதிர்ப்புகளுக்கிடையில் இன்றைய தினம் நீட் தேர்வானது திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது.