சத்தியமங்கலம் : சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக-கர்நாடக எல்லையில் அடர்ந்த வனப்பகுதியில் பண்ணாரி சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இங்கு காவல்துறை, வனத்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறை சோதனைச்சாவடிகள் உள்ளன. தமிழகம்-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே செல்லும் வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் ஒற்றை யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி பண்ணாரி சோதனைச்சாவடி பகுதியில் சாலையின் நடுவே நடமாடியது. யானையை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் சோதனைச்சாவடி பணியில் இருந்த போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் அச்சமடைந்தனர்.