சென்னை: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் சேவையாற்ற நாம் தயாராக வேண்டும், எதற்கும் அஞ்சாமல் எதிர்காலத்தில் நம் இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவோம் என உறுதியேற்போம் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக 16ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அக்கட்சி தொண்டர்களுக்கு கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவுரை வழங்கியுள்ளார்.