சிதம்பரம்: நீட் தேர்வை ரத்து செய்யக்ேகாரி கம்பத்தில் தலைகீழாக தொங்கி வாலிபர் நூதன போராட்டம் நடத்தினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி(36). இவர் சிதம்பரம் அருகே உள்ள ஏ.மண்டபம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி, அந்த பகுதியில் டெய்லர் கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று இவர் நீட் தேர்வுக்கு எதிராக நூதன போராட்டம் நடத்தினார். சிதம்பரம் - கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏ.மண்டபம் கிராமத்தின் சாலை நடுவே உள்ள சிசிடிவி கேமரா கம்பத்தில் தலைகீழாக 5 நிமிடம் தொங்கினார். அப்போது நீட் தேர்வுக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினார்.