சென்னை: நீட் காரணமாக நடைபெறும் மரணங்கள் தற்கொலை அல்ல; மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கொலைகளே ஆகும். நீட் தேர்வை நடத்துவதில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பதற்கு எம்.பி.கனிமொழி கண்டம் தெரிவித்துள்ளார். விக்கிரபாண்டி மற்றும் நித்யஸ்ரீ ஆன்லைன் வகுப்புகளை கையாள முடியாமல் தற்கொலை செய்துகொண்டனர். நீட் தேர்வு அச்சத்தால் இன்னும் எத்தனை மாணவர்கள் உயிர்களை இழக்கப் போகிறோம் என கேள்வி எழுப்பியுள்ளார்.