சென்னை: சென்னையில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். திருமங்கலத்தில் இருசக்கரவாகனத்தில் சென்ற திருச்செல்வம் நிலைத்தமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். மேலும் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் சேகர்(54) என்பவர் இறந்துள்ளார். மணலி அருகே முன்னாள் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முயன்ற ராஜ் (22) விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.