காதலி பேசுவதை நிறுத்தியதால் 3வது மாடியில் இருந்து குதித்தவர் கால்முறிவு

தண்டையார்பேட்டை: காதலி தன்னுடன் பேசுவதை நிறுத்தியதால் 3வது மாடியில் இருந்து குதித்த ஆட்டோ டிரைவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கொருக்குப்பேட்டை காரனேஷன் நகர் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் துரை (22), ஆட்டோ டிரைவர்.  இவரும், அதே பகுதியை  சேர்ந்த  இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.  இந்நிலையில் திடீரென அந்த இளம்பெண், துரையுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

இதனால் மனமுடைந்த துரை நேற்று முன்தினம் தனது வீட்டின் 3வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் காலில் முறிவு ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர், அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில்  சிகிச்சை பெற்று வருகிறார்.  இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: