தஞ்சை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஜெயலலிதா சிலைக்கு மனு கொடுத்து நூதன போராட்டம் நடத்தியதாக மாணவர சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியை நடத்தி வருவதாக கூறும் அதிமுக அரசு, நீட்தேர்வு குறித்து உரிய கவனம் செலுத்தவில்லை என்பதை சுட்டிக்காட்டும் வகையில் தஞ்சை ரயிலடியில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.